Pages

Labels

Friday, November 11, 2011

Richa Gangopadhyay and Simbu
படத்தை ஒஸ்தியா எடுத்து என்ன பிரயோஜனம்... தியேட்டர்கள் ஒஸ்தியான பரொஜக்டர்கள், சவுண்ட் தரத்தோடு படத்தை திரையிட்டால்தானே காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்கள் திருப்தியாக உணர்வார்கள், என்று வருத்தப்படுகிறார் ஒஸ்தி பட தயாரிப்பாளர் ரமேஷ்.

தனுஷை வைத்து உத்தமபுத்திரன் படத்தை தாயாரித்தவரும் பெரும் பொருட்செலவில் சிம்புவை வைத்து ஒஸ்தி படத்தை தயாரித்து வருபவருமான ரமேஷ் இது தொடர்பாக மேலும் கூறுவதாவது:

படங்களை திரையரங்குகளில் திரையிடுவத‌ற்கு என்று விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளும் இருக்கின்றன. திரையரங்களில் படங்களை காண்பிக்க குறைப்பிட்ட அளவு துல்லியம் மிக்க புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. அதாவது 4கே அளவிலான துல்லியம் கொண்ட புரஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

திரைப்படங்கள் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களை நெறிப்படுத்தும் ஹாலிவுட் அமைப்பான எஸ் எம் பி டி ஈ வலியுறுத்தும் இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டே திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட வேண்டும் .உலகம் முழுவதும் இந்த விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்ற‌ன.

இந்தியாவிலும் கூட திரைப்படங்கள் தொடர்பான சட்டம் இவற்றை வலியுறுத்துகின்றன.

ஆனால் சமீப காலமாக பல திரையரங்குகளில் இவை பின்பற்றப்படவில்லை என்பது தான் வேதனை. பெரும்பாலான திரையரங்குகளில் 1 கேவுக்கும் குறைவான துல்லியமான காட்சியை தரக்கூடிய புரஜக்டர்களே இருக்கின்றன. முன்னணி திரையரங்களில் சிலவும் இதற்கு விதிவிலக்கல்ல!

ஒரு சில மல்டிபிலக்ஸ் அரங்குகளில் ஒரு திரை தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரஜக்டர்கள் பயன்படுத்தப்படுகின்ற‌ன. இதனால் ரசிகர்கள் உயர்ந்த தரத்தில் காட்சிகளை பார்க்க முடியாமல் போகிறது. படங்கள் புள்ளி புள்ளியாக தெரியலாம்.

த‌யாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதல் போட்டு அதிந‌வீன தொழில்நுட்பத்தில் படம் எடுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் நிரைவேறுவதில்லை. காரனம் தரக்குறைவான புரஜக்டர்களால் ரசிக‌ர்கள் உருவாக்கப்பட்ட தரத்தில் படங்களை பார்த்து ரசிக்க முடிவதில்லை.

அது மட்டுமல்ல; இப்படி தரக்குறைவான முரையில் படங்களை பார்ப்பதால் கண்க‌ளுக்கு பாதிப்பு ஏற்படலாம். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுகளை விட கூடுதல் ஒலி அளவால் காதுகள் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மெனையாம செவிகளுக்கு இவை ஏற்றதல்ல. மேலை நாடுகளில் திரையரங்குகளில் ஒலி அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தியிருப்பார்கள். இங்கு இது பற்றியெல்லாம் கவலைப்படுவதுல்லை.

குறிப்பிட்ட சில திரையரங்குகள் தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரஜக்டர்களே இருக்கின்றன. இந்த புரஜக்டர்கள் திரையரங்குகளில் திரையிட ஏற்றவை அல்ல. கருத்தரங்கு போன்றவ‌ற்றில் பயன்படுத்த மட்டுமே உகந்தவை.

ஆனால் திரையிடல் தொழிலை கைக்குள் வைத்திருக்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இத்தகைய தரக்குறைவான புரஜக்டர்களை விநியோகித்து வருகின்றன. இதனால் ரசிகர்கள்தான் ஏமாற்றப்படுகின்ற‌னர்.

திரையரங்குகளில் விதிமுறை மீறப்படுவது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் செல்வாக்கு மிக்க பெண் வழக்கறிஞ‌ர் ஆஜராகி வாதிட்டுள்ளர் என்பது வேதனையானது.

இதில் மேலும் வேதனை என்னவென்றால் வங்க தேசம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் தரக்குறைவற்ற புரஜக்டர்களை பயன்படுத்தியதால் வெளியேற்றப்பட்டு விட்டன என்ப‌துதான். ஆனால் இந்தியாவில் இவை சுத‌ந்திரமாக செயல்ப‌டுகின்ற‌ன. இது ஏன்?

சில நிறுவன‌ங்கள் லாப நோக்கிற்காக மோசமான புரஜக்டர்களை விநியோகித்து வருவதால் படம் எடுக்கும் தயாரிப்பளர்களும் பாதிக்கப்படுகின்றன‌ர். ரசிகர்களும் ஏமாற்றப்படுகின்ற‌னர்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட உள்ளேன்.

திரையுலக பிரமுகர்கள், குறிப்பாக ஃபிக்கி போன்ற அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து மவுனமாக‌ இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

திரையுலகை காப்பாற்ற‌ ரசிகர்களை பாதுகாக்க திரையிடல் தொடர்பான விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்", என்றார்.

'ஒஸ்தி பிரியாணி'

Simbu with Briyani
வாயைக் கட்டி, உடம்பை ஏத்தி படாதபாடுபட்டு ஒஸ்தி படத்தில் நடித்ததற்காக, சிம்புவுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார் இயக்குநர் தரணி.

ஒஸ்தி படத்துக்காக சிம்பு கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை மிடுக்கான தோற்றத்துக்கு கொண்டு வந்தாராம். உணவில் செம கட்டுப்பாடாம். ஒரே ஷெட்டியூலில் படத்தினை முடித்து க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையில் படமாக்கி முடித்தனர்.

நேற்று இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை முடித்தார்களாம் படக்குழுவினர்.

சிம்புவுக்கு பிரியாணி என்றால் அப்படி ஒரு பிரியமாம். ஆனால் இந்தப் படத்துக்காக கடந்த 2 மாதங்களாக பிரியாணி சாப்பிடவில்லையாம். அவரது பிரியாணி விருப்பத்தைப் புரிந்து கொண்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் தரணி பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்.

இது குறித்து சிம்பு "கடந்த இரண்டு மாதங்களாக இப்படத்திற்காக பிரியாணி சாப்பிட முடியவில்லை. ஆகையால் தரணி எனக்கு மொத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரியாணி விருந்து கொடுத்தார்," என்றார்.

பிரியாணி, சிக்ஸ் பேக்கெல்லாம் சரி... ரிலீசானதும் படம் பெட்டிக்கு 'பேக்கப்' ஆக இருக்கணும்!