Pages

Labels

Thursday, December 13, 2012

Thursday, November 22, 2012

இறுக்கியணைக்கப் பார்த்த இயக்குநர்... எச்சரிக்கையுடன் தள்ளி நின்ற நமீதா!

Namithaa S Technique Avoid Director



டிவி சீரியல்கள் எடுத்து வெற்றி கண்ட கையோடு சினிமா எடுக்க வந்த இயக்குநர் அவர். ஓரிரு படங்கள் எடுத்தார். ஒன்றும் வெற்றியடையவில்லை.
ஆனாலும் வெற்று ஜம்பத்துக்கும் நடிகைகளை உண்டு இல்லை என பாடாய் படுத்துவதிலும் அவர் பலே ஆசாமி.
எந்த நடிகையாக இருந்தாலும் எடுத்த எடுப்பில் இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தர வேண்டுமாம். எதுக்கு அது என்றால்.. நான் காலை வணக்கம் சொல்லும் முறையே இதுதான் என்பாராம். படப்பிடிப்பு முடியும்போதும் இப்படி இறுக்கி அணைக்கும் படலம் உண்டாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் ஒரு படத்தை ஆரம்பித்தார். வாய்ப்பு உள்ள, வாய்தா போன நடிகைகள் 9 பேரை கதாநாயகி என அறிவித்துவிட்டார்.
அவர்களில் ஒருவர் நமீதா. உப்புமா கம்பெனி என்றாலும், அவசரத்துக்கு உப்புமாவும் பரவாயில்லை என்று நடிக்க ஒப்புக் கொண்டார்.
படப்பிடிப்புக்கு செல்லும் போதுதான், அவர் காதில் இயக்குநரின் 'இறுக்கியணைச்சு உம்ம தரு' மேட்டரை சொன்னார்களாம்.
அப்படியா சங்கதி என்று கேட்டுக் கொண்ட ஆறடி உயர அம்மணி, செட்டுக்குள் நுழைந்திருக்கிறார். ஹலோ நமீதா டியர் என்று உரக்கச் சொன்னபடி அனைவர் முன்னிலையிலும் கட்டிப்பிடிக்க இயக்குநர் ஓடி வர, நமீதா சட்டென்று இரண்டடி பின் வாங்கி 'வணக்கம் பிரதர்' என்று போட்டாராம் ஒரு போடு!
செம ஷாக்காகிப் போன டைரடக்கர், 'யாரோ செம்மையா போட்டுக் கொடுத்திருக்காங்கப்பா... கட்டிப்புடிக்கலன்னாலும் பரவால்ல.. வாய்க்கு வாய் மச்சான்ஸ் மச்சான்ஸ்னு கூப்புடற அந்தப் பொண்ணு புதுசா பிரதர்னு சொல்லிடுச்சே...!" என்று இரவு முழுக்க புலம்பிக் கொண்டிருந்தாராம்!

நிகழ்ச்சித் தொகுப்பாளர் டூ ஹீரோ



டிவி வந்த காலத்தில் சினிமாவிற்கு போட்டியாகிவிடும் என்று நடிகர்களும், இயக்குநர்களும் கருத்து தெரிவித்தனர். ஆனால் சினிமாவிற்கு பெருமளவில் பக்கபலமாக இருப்பது சேட்டிலைட் சேனல்கள்தான். ஒரு திரைப்படம் ரிலீசாகியிருக்கிறது என்பதில் தொடங்கி அதில் நடித்துள்ள நடிகர், நடிகையர்கள் வரை பேட்டி கண்டு மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கிறது. தவிர சேட்டிலைட் ரைட்ஸ் மூலம் தயாரிப்பாளருக்கு வருமானம் கிடைக்கிறது. நம்முடைய செய்தி அதைப்பற்றியல்ல.
சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வரும் நடிகர்கள் ஒருபக்கம் இருக்கையில் சின்னத்திரையில் தொகுப்பாளர்களாகவும், நடிகர்களாகவும் இருந்து சினிமாவில் பிரபலமடைந்துள்ளவர்களைப் பற்றியதுதான் படியுங்களேன்.

 
 

விஜய்யின் துப்பாக்கி வெடியும் சாம்பிராணி புகையும்!- ஒரு 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட்!

பரபரவென காட்சிகள் நகர்வது போல படமெடுத்தால் போதும்... மக்கள் குறைகளை மறந்துவிடுவார்கள் என்ற வீச்சறுவா புகழ் ஹரியின் பாலிசிதான் இனி சரிப்பட்டு வரும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது முருகதாஸ் என்ற கமெண்ட் இப்போது எல்லோர் வாயிலும் வர ஆரம்பித்துவிட்டது, துப்பாக்கி படம் ஓடும் அரங்குகளில்.
thuppakki user review
தீபாவளிக்கு வந்த படங்களில் பரவாயில்லை என்ற மவுத் டாக் வந்துவிட்டது. அதை நம்பி, விஜய்யும் விடிய விடிய பார்ட்டி கொடுத்து, அந்த தெம்போடு அடுத்த துப்பாக்கிக்கு ரெடியாகிவிட்டார்.ஆனால் துப்பாக்கி ஓடும் தியேட்டர்களில் ஜனங்களின் பல்ஸ் என்ன என்று பார்க்கப் புறப்பட்டோம்.
அடடா... அவங்கதாங்க நிஜமான விமர்சகர்கள். எந்த முன் தயாரிப்புமின்றி, படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் அடிக்கிற கமெண்டைக் கேட்டால், ஏன்டா இப்படி ஒரு படத்தில் நடித்தோம் என விஜய்யும் (அவருக்கு அப்படியெல்லாம் தோணுமாங்கிறது சந்தேகம்தான்...), இவரோடு ஏன் சேர்ந்தோம் என இயக்குநர் முருகதாஸும் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
இந்தப் படத்தில் எந்தக் காட்சியிலாவது நம்பகத்தன்மை அல்லது உண்மை இருக்கிறதா என்பது முதல் கேள்வி.
படம் முழுக்க மிலிட்டரி ஆபீ.. ஸர் விஜய், ஏதோ செட் தோசை சுடுவது போல எல்லோரையும் சுட்டுக் கொண்டே இருக்கிறார். எழவு... அதைக் கேட்க ஒரு போலீஸ் கூட குறுக்கே வரவே மாட்டேங்குது. மும்பையில் போலீஸ்காரங்க அவ்வளவு டம்மி பீஸுங்களா...?
அட ஒரு கப்பலுக்கு வெடி வைக்கிறாய்ங்கய்யா... அந்தக் காட்சியை 50 ரூபாய்க்கு இங்கிலீஷ் பட சிடி வாங்கிப் பாத்து அப்படியே சுட்டு எடுத்திருந்தா கூட நல்லா வந்திருக்கும். கெரகம்... இவர்களது லோ குவாலிட்டி கிராபிக்ஸை பாருங்கள்... கப்பல் வெடிச்சதும் ஏதோ சாம்பிராணி போட்ட மாதிரி சவசவன்னு கிளம்புது புகை!
ஆமா... இந்த சத்யனையெல்லாம் யாரும் கேப்பாரே இல்லையா... காமெடி என்ற பெயரில் அவர் போடற சத்தம் கர்ண கொடூரம்டா சாமி.. பேசாம அவரை ஊமையாவே நடிக்க வச்சிருக்கலாம்..!
அவருக்கு கொஞ்சமும் சளைக்காத சொதப்பல் காமெடி பீஸ் ஜெயராம்.
மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடிப்பை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனா ஹீரோ நம்ம இளைய தளபதியாச்சே... மொத்த கிரெடிட்டும் அவருக்குத்தானே சேரணும்... சும்மா... இடது கையால் சொடக்குப் போட்டபடியே தீவிரவாதிகள் கூட்டம் மொத்தத்தையும் ஒழித்துக் கட்டுகிறார் பாருங்க... 2008 மும்பை குண்டு வெடிப்பப்போ இந்தாளு எங்கேய்யா போயிருந்தார்னு தியேட்டர்ல கமெண்ட் அனல் பறக்குது!

அப்புறம் இந்த ஹீரோயின்...
குணா படத்துல கமல் சொல்வாரே.. நடு நடுவே மானே தேனே பொன்மானேன்னு போட்டுக்கன்னு... அப்படித்தான்... துப்பாக்கி சத்தம் கொஞ்சம் காதைக் கிழிக்கும்போது, இந்தப் பொண்ணை லம்பாடி டிரஸ்ல ஆடவிட்டு, டமார்னு மறைச்சு வெச்சுக்கிறார் டைரக்டர். அப்புறம் ஒரு மூணு ரீல் கழிச்சு திரும்ப கண்ல காட்டறார். இப்படியே காட்டி காட்டி... க்ளைமாக்ஸ்ல கரெக்டா ஹீரோவோட டூயட் ஆட வரவச்சுடறார்!
படத்தை பார்க்கும்போது பலர் கோபத்தில் அங்கும் இங்கும் திரும்பிப் பார்ப்பதும், பக்கத்தில் இருப்பவர் ரொம்ப நேரத்துக்கு முன்பே தூங்கிவிட்டதை பார்த்து, 'அட, இது நல்லா ஐடியாவா இருக்கே' என்று அவர்களில் பலரும் தூங்க ஆரம்பித்ததும் தான் நமது ரவுண்ட்-அப்பின் ஹைலைட்!
ரமணா மாதிரி சென்சிபிளான படம் கொடுத்த முருகதாஸ்தானா இதுன்னு ரொம்ப சந்தேகமாவும்... இவரும் விஜய் கூட சேர்ந்து இப்படி ஆகிட்டாரேங்கிற வருத்தமும்தான், படம் முடிஞ்சதும் எனக்கு மிஞ்சிச்சு!

போடா போடி - விமர்சனம்

நடிப்பு: சிம்பு, வரு சரத்குமார் (வரலட்சுமி), ஷோபனா, விடிவி கணேஷ்
இசை: தரன் குமார்
மக்கள் தொடர்பு: நிகில்
ஒளிப்பதிவு: டங்கன் டெல்போர்டு
தயாரிப்பு: ஹிதேஷ் ஜபக்
இயக்கம்: விக்னேஷ் சிவன்

பெண்ணென்பவள் திருமணத்துக்குப் பின் கணவனை கவனித்துக் கொண்டு, பிள்ளை பெற்று, அதை வளர்ப்பதிலேயே காலத்தைக் கழிக்க வேண்டுமா... அவளுக்கென்று கேரியர் வேண்டாமா...
தன் கண் முன் மனைவி ஆண் நண்பர்களுடன் எப்படி இருந்தாலும் அதை கணவன் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?
poda podi review
-இந்த ஈகோ மோதல்தான் போடா போடி படம். அதனை முடிந்தவரை சுவாரஸ்யமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். அனிமேஷன் டிசைனர் சிம்புவும், நடனக் கலைஞர் வரு சரத்குமாரும் காதலிக்கிறார்கள். காதல் என்றால் பொய் இல்லாமலா... இந்தக் கதையில் பொய்யாய் அவிழ்த்துவிடுபவர் ஹீரோயின் வரலட்சுமி. ஆனால் எதற்காகவும் நடனத்தை விட்டுத் தர மறுக்கிறார். இந்தப் பொய் மற்றும் பிடிவாதத்தால் வெறுத்துப்போய் 'போடி உன் காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம்' என்று ஓடுகிறார் சிம்பு.
ஊடல் முடிந்து மீண்டும் கூடுகிறார்கள். இந்த முறை, திருமணம் செய்து கொண்டால் வரலட்சுமியை வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற யோசனை உதிக்க, சிம்பு அதை செயல்படுத்த முயல்கிறார். ஆனால் திருமணத்துக்குப் பிறகும் நடனத்தை விடமுடியாது, தன் பழக்கங்களையும் மாற்றிக் கொள்ளமுடியாது என்கிறார் வரலட்சுமி. கர்ப்பமாக்கிவிட்டால் நடனமாட முடியாதே என்ற அபார யோசனையை சித்தப்பா விடிவி கணேஷ் சொல்ல, அதையும் செயல்படுத்திப் பார்க்கிறார்.
குழந்தை பிறக்கிறது. இருவரின் சண்டையில் ஒரு விபத்து நேர, அதில் குழந்தை இறக்கிறது. சிம்புவும் வரலட்சுமியும் பிரிகிறார்கள். பிரிந்த மனைவியை ஒடிப்போய் மல்லுக்கட்டி மீண்டும் குடித்தனம் நடத்த கூட்டி வருகிறார் சிம்பு, நடனமாடியே தீருவேன் என்ற அவரது நிபந்தனையை ஏற்றுக் கொண்டு.
ஆனால், மீண்டும் ஈகோ மோதல் வெடிக்கிறது. நடனமாடும்போது அடுத்தவன் உன்னைத் தொடுவதை எப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது என்ற சிம்புவின் ஆதங்கத்தின் மூலம்...
கடைசியில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுகிறார்கள். கண்டவனுடன் ஆடுவதைவிட, கணவனுடனே ஆடித் தொலைக்கிறேன் என வரலட்சுமி முடிவு செய்ய, சிம்பு டான்ஸ் பார்ட்னராகிறார்.
ஆனால் டான்ஸ் காம்பெடிஷனில் அவர் சொதப்புகிறார். 'சரி, எனக்குதான் சல்சா டான்ஸ் வரவில்லை.. அதனால் எனக்கு நன்றாக ஆட வரும் குத்து டான்ஸுக்கு நீ மாறிக் கொள்' என சிம்பு அட்வைஸ் பண்ண, சல்சா குத்துக்கு மாறுகிறது. சக்ஸஸ் ஆகிறது.
ஆனால்... அடுத்து டான்ஸ் காம்பெட்டிஷனில் இன்னும் 14 ரவுண்டுகள் இருக்கின்றன. அதில் எப்படி ஜெயிப்பது என்று வரலட்சுமி கேட்க, அதற்கு சிம்பு ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார். அது மீண்டும் வரலட்சுமியை கர்ப்பமாக்குவது.. அப்புறம்....சுபம்!
ஸ்ஸப்பா... ஒருவழியா கதையை எழுதி முடிச்சிட்டேன். கதையை எழுதும் போதுதான் இத்தனை இம்சையாக இருக்கிறதே தவிர... அதை புது இயக்குநர் விக்னேஷ் சிவன் படமாக்கிய விதம், கொஞ்சம் புதுசாகவும் சுவாரஸ்யமாகவும்தான் இருக்கிறது.
நெத்தியடியாக ஒரு தோல்வி கிடைத்தால்தான் சிம்பு மாதிரி ஹீரோக்கள் வாயையும் கையையும் அடக்கிக் கொண்டு நடிப்பார்கள் போலிருக்கிறது. ஒஸ்தியில் பட்ட அடி, இந்தப் படத்தில் அவரை அப்படியே திருப்பிப் போட்டிருக்கிறது (அட்லீஸ்ட் அப்படி நடிக்கவாவது செய்ய வைத்திருக்கிறது).
அவரை விட வெயிட்டான ரோல் வரலட்சுமிக்கு. அதை செவ்வனே செய்திருக்கிறார். குரலும் தோற்றமும் சற்று கடூரம்தான் என்றாலும், அவரது ஈடுபாடும், டான்ஸும் அவற்றை மறக்கடிக்க வைக்கிறது. அவரை ஏன் இந்தப் படத்துக்கு ஹீரோயினாக்கினார்கள் என்பதை சரியாக நியாயப்படுத்தியிருக்கிறார் வரலட்சுமி.
விடிவி கணேஷ் வரும் காட்சிகளில் தியேட்டர் கலகலக்கிறது. ஆனால் இன்னும் எத்தனைப் படத்துக்கு இது ஒர்க் அவுட் ஆகும் என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.
ஷோபனாவுக்கு ஒரு ரெண்டுங்கெட்டான் கேரக்டர்.
ஒட்டுமொத்தமாக படம் சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல காட்சிகள் ரசிக்கும்படி இருப்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். குறிப்பாக பிரிந்த மனைவியை கூட்டிப் போக வரும் சிம்பு, ஷோபனாவிடம் வாதிடுவது. குழந்தைக்காக அவர் பாடும் ங்கொப்பன் மவனேயை ரசிக்க முடியவில்லை என்றாலும், அதை எடுத்திருக்கும் இடம், விதம் அழகு. முழு கிரெடிட்டும் ஒளிப்பதிவாளருக்குதான்!
டாய்லெட்டுக்குள் வெறுப்புடன் வீசியெறிந்த திருமண மோதிரத்தை வரலட்சுமி மீண்டும் எடுப்பது, படத்தில் சபாஷ் பெறும் இன்னொரு காட்சி!
காதல், ஊடல், சண்டை, பிரிவு, மீண்டும் கூடல், ஊடல், சண்டை என ரோலர் கோஸ்டர் மாதிரி காட்சிகள் நகர்வதில் ஒரு கட்டத்தில் களைப்புத் தட்டுவதும் உண்மைதான். ஆனால் அந்த டான்ஸ் காம்பெடிஷன் நெருங்க நெருங்க, நாமும் அதில் ஐக்கியமாவதை உணர்கிறோம்...
தரணின் இசை பரவாயில்லை. பாடல்கள் எதுவும் நினைவிலும் இல்லை. மீண்டும் மீண்டும் தன் பழைய பாடல்களையே புதுப் பாட்டாக கோர்ப்பதை சிம்பு எப்போது விடப் போகிறாரோ!
புது இயக்குநர் விக்னேஷ் சிவன், எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் வித்தியாசமான கதையை வித்தியாசமான அணுகுமுறையோடு ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். ஆனால் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது!
எதிர்ப்பார்ப்பில்லாமல் போனால் ரசிக்கலாம்!

Tuesday, July 10, 2012

ரூ.1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த த்ரிஷா, ஸ்ரேயா


ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருந்தபோதிலும் புதுமுக நடிகருடன் ஜோடி சேர நடிகைகள் த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோர் மறுத்துவிட்டனர்.
புதுமுக நடிகர் அச்சுதன் சங்கர் என்பவர் கோப்பெருந்தேவி என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் பெரிய நடிகைகளை நடிக்க வைக்க நினைத்தார். இதையடுத்து த்ரிஷாவை அணுகி தனக்கு ஜோடியாக நடிக்க கேட்டுள்ளார். இதற்காக த்ரிஷாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுக்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
த்ரிஷா முதலில் ஓ.கே. சொல்லிவிட்டு பிறகு புதுமுக ஹீரோவோடா நடிக்க என்று நினைத்து மறுத்துவிட்டார். இதையடுத்து ஸ்ரோயாவை கேட்டுள்ளனர். அவருக்கும் ரூ. 1 கோடி சம்பளமாகக் கூறப்பட்டது. ஆனால் அவரும் புதுமுக ஹீரோ அச்சுதன் சங்கருடன் நடிக்க மறுத்துவிட்டார்.
த்ரிஷாவுடன் நடிக்க இளம் ஹீரோக்கள் எல்லாம் வரிசையில் நிற்கையில் அவர் எப்படி புதுமுக நாயகனுடன் நடிக்க ஒப்புக் கொள்வார். ஸ்ரேயா கையில் படங்கள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் எதுக்கு ரிஸ்க் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.

பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் டோக்கியோவில் கோச்சடையான் ஆடியோ ரிலீஸ்!!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் பட இசை வெளியீட்டை இந்த முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகின்றனர்.
ஆடியோ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில் 5 பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை ரஜினியே பாடியுள்ளார்.
ரஜினியின் முந்தைய படமான எந்திரன் இசை வெளியீட்டை மலேசியாவில் சன் டிவி நடத்தியது குறிப்பிடத்தக்கது.
படத்தை சூப்பர் ஸ்டார் ரஜியின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டனில் பிரிமியர் ஷோக்கள்
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு டோக்கியோவில் என்றால், படத்தின் சிறப்புக் காட்சிகள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் நடக்கவிருக்கிறது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் பிரிமியர் ஷோக்களை நடத்தவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
100 சதவீதம் ஹாலிவுட் ஸ்டைலில் படத்துக்கு புரமோஷனல் வேலைகளைச் செய்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.
ரஜினி கலந்து கொண்ட கோச்சடையான் பிரஸ் மீட்டே லண்டனில் நடந்தது குறிப்பிடத்தக்கது

எதிர்ப்பார்த்த ஸ்ரீப்ரியா குடும்பம் - வராத சிவாஜி குடும்பம்


சிவாஜி குடும்பத்து வாரிசுகளுள் ஒருவர். ஸ்ரீப்ரியாவின் அக்கா மீனாவுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கும் பிறந்தவர். ஊர் உலகறிய மீனா தன் மனைவி என்றும், சிவாஜி தேவ் தன் மகன் என்றும் ராம்குமாரே மேடை போட்டு அறிவித்தும் விட்டார்.
சிவாஜி தேவ் முதலில் நடித்த படம் சிங்கக்குட்டி. இந்தப் படத்தின் வெளியீடு ஏக தடபுடலாகத்தான் நடந்தது. இந்தப் படவிழாக்களில் நேரடியாக ராம்குமார் பங்கேற்காவிட்டாலும், செய்தியாளர்களிடம் தன் மகனுக்காக பேசவே செய்தார்.
அந்தப் படம் சரியாகப் போகவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு சிவாஜி தேவ் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஒன்று 'புதுமுகங்கள் தேவை'.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேபில் நடந்தது. விழாவுக்கு ஸ்ரீபிரியா, அவர் அக்கா மீனா ராம்குமார் ஆகியோர் வந்திருந்தனர். தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் ஆஜராகியிருந்தனர்.
விழாவுக்கு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டவர் ராம்குமார்தான். கடைசி வரை அவர் வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ஏனோ ராம்குமார் வரவே இல்லை!

Saturday, March 17, 2012

இதழ் வெளியீட்டு விழா.....

வேர்கள் இதழை நடிகை “ஹரிபிரியா” வெளியிட இதழ் ஆசிரியர் “ஹுசைன்” பெற்றுக்கொள்கிறார்.உடன் துணை ஆசிரியர் “சசிகுமார்”.மற்றும் கல்லூரியின் கோ-ஆர்டினேட்டர் “கவிதா” மேடம் அவர்களும் இருந்தனர்

எனது மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை இன்று!

இதழின் முதல் பக்கம்
நான் படிக்கும் சாஃப்ட்வியூ மீடியா கல்லூரியில் மாதம் தோறும் மாணவர்களின் படைப்பில் ஒரு மாணவர் பயிற்ச்சி இதழ் வெளிவரும். அதை போல இந்த மாதம் மார்ச் மாத இதழை நான் ஆசிரியராக ஏற்றுக்கொண்டேன் மேலும் எனது பணிகளுக்கு துணையாக எனது நண்பர் திரு. சசிகுமார் துணை ஆசிரியராக பொருப்பேற்றுக் கொண்டார். மேலும் இந்த இதழை நான் முடிக்க எனக்கு பெறிதும் உதவியாக இருந்த “அண்ணன் தாஸ்” மற்றும் எனது இதழியல் ஆசிரியர் “திரு.முத்துப்பாண்டி”
 அவர்களுக்கும் எனது உள்ளம் கணிந்த நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன். மேலும் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த சாஃப்ட்வியூ மீடியா கல்லூரிக்கும் நன்றி ! நன்றி! நன்றி!.............


நடிகை “ஹரி பிரியா” இதழை வெளியிட்டார்

            இந்த இதழை எமது பள்ளியின் முன்னால் மாணவியும் “கனா கானும் காலம்” சின்னத்திரை தொடர் நடிகை “ஹரி ப்ரியா” அவர்கள்  இன்று காலையில் பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் வெளியிட்டார் அதை ஆசிரியர் என்ற முறையில் நான் பெற்றுக்கொண்டேன்....

Thursday, January 19, 2012

நான் நேரில் பார்க்க ஆசைப்பட்டேன்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு என் அண்ணன் திரு தமிழ் தாசன் .என்னை 35வது புத்தக கண்காட்சிக்கு சாஃப்ட்வியூ ஸ்டால்கு அழைத்து சென்றார். அங்கு நான் பல நாட்களாக புத்தகத்திலும்,நியூஸ் பேப்பரிலும் பார்த்த மா.ஆண்டோ பீட்டர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பும் . நான் கடந்த ஆறு மாதங்களாக நேரில் பார்க்க ஆசைப்பட்டேன் . எனது ஆசை என் அண்ணன் தாஸ் மூலம் நிறைவெறியது .எனது ஆசையை நிறைவேற்றிய தாஸ் அண்ணனுக்கு எனது ஆயிரக்கணக்கான் நன்றிகள்.மேலும் ஆண்டோ சாரிடம் பேசவும் வாய்ப்பு கிடைத்தது.
நம்ம சென்னை ரயினோஸ் பாடல் இலவசம் டவுன்லோட் செய்து மகிழுங்கள்.
 Chennai Rhinos - HQ Theme song - CCL 2 -UniqHDVisuals™